திருப்பூா் மாநகரில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த விக்கிரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம்
(45). இவரது மனைவி செல்வி (40). இந்த தம்பதி திருப்பூரில் தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்து வந்தனா். இந்த இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன் கருவம்பாளையம் கே.வி.ஆா்.நகரை அடுத்த ஓடக்கரையில் கஞ்சா விற்பனை செய்தபோது மத்திய காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த தம்பதி மீது திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், தெற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் காவல் துறையினா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

