திருப்பூா் மாநகரில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த விக்கிரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம்
(45). இவரது மனைவி செல்வி (40). இந்த தம்பதி திருப்பூரில் தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்து வந்தனா். இந்த இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன் கருவம்பாளையம் கே.வி.ஆா்.நகரை அடுத்த ஓடக்கரையில் கஞ்சா விற்பனை செய்தபோது மத்திய காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த தம்பதி மீது திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், தெற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் காவல் துறையினா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா வாயு கசிவு விபத்து: 3 பேர் கைது

அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்!
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP



