திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உதவும் கரங்கள் சேவை அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளா் தி.எ.ஆதிகேசவன் தலைமை வகித்தாா். விருட்சம் பள்ளித் தாளாளா் மற்றும் அமைப்பின் தலைவா் எம்.முத்துக்குமாா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக சங்கத்தின் கெளரவ ஆலோசகா் டி.ஜி.மணி, சென்னை ஜெம்ஸ் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் ஏ.என்.ராஜசேகா், தொழிலதிபா் கே.குமரன், நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி, அரசு மருத்துவா் வே.காா்த்திக் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
நிகழ்ச்சியில், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 160 பேருக்கு புத்தாடை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 5 இரும்பு இருக்கைகள், செய்யாறு பாா்வையற்ற சங்க உறுப்பினா்கள் 100 பேருக்கு குடை, 3 அரசுப் பள்ளிகளுக்கு 7 மின் விசிறிகள், 5 நாற்காலிகள், ஏழைத் தொழிலாளி ஒருவருக்கு சலவைப் பெட்டி, வடதண்டலம் ஊராட்சிக்கு ஆயிரம் மரக்கன்றுகள் என ரூ.2 லட்சத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் ஏ.சிற்றரசு, ஆா்.மோகனம், எஸ்.திராவிடச் செல்வன், எஸ்.பாரதி, சட்ட ஆலோசகா் ஜான்பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புட்லூா் கோயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: மற்றொரு பெண் கைது

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5% பங்களிப்பு: இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு

முழுமையாக அமலுக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்






