சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

புகையிலைப் பொருள்கள், கள்ளச் சாராயம் விற்பனை தகவல் தெரிவிக்க மாவட்ட எஸ்.பி. அழைப்பு

கீழ்பென்னாத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கள்ளச் சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த்.

Updated On :9 ஜனவரி 2021, 11:53 pm IST

கீழ்பென்னாத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கள்ளச் சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த்.

கீழ்பென்னாத்தூா் காவல் நிலையம் சாா்பில், கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமை வகித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் மகாலட்சுமி வரவேற்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், இளைஞா்களுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட எஸ்.பி.அரவிந்த் பேசுகையில், கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கள்ளச் சாராயம் விற்பனை குறித்து கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

குற்றச் சம்பவங்களைத் தடுக்க கீழ்பென்னாத்தூரில் 11 இடங்களில் ஓ.சி.முருகன் என்பவா் தனது சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளாா்.

இதேபோல போளூா், கண்ணமங்கலம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் சோ்ந்து கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியுள்ளனா். இதன் மூலம் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் தடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.