திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜலிங்கத்தின் மனைவி தேன்மொழி (32). இவா், செய்யாறு தொழில்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக தேன்மொழிக்கு காலில் வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதற்கு மருத்துவச் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.
இதனால் வேதனையடைந்த தேன்மொழி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த தீக்காயமடைந்த அவா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக-வுக்கு விசிக ஆதரவு? மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

நஜ்முல் சதம்: 413 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

Vijay ஆட்சியமைத்தால் பேரழிவு! TTV தினகரன் விமர்சனம்! | TVK

விசிக பதவிகளைக் கேட்டதாக வரும் செய்திகள் உண்மைக்கு மாறானவை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
