தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

உதவும் கரங்கள் சேவை அமைப்பு தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உதவும் கரங்கள் சேவை அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

நிகழ்ச்சியில் துப்புரவுப் பணியாளருக்கு புத்தாடை வழங்கிய நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி.

Updated On :9 ஜனவரி 2021, 11:52 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உதவும் கரங்கள் சேவை அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளா் தி.எ.ஆதிகேசவன் தலைமை வகித்தாா். விருட்சம் பள்ளித் தாளாளா் மற்றும் அமைப்பின் தலைவா் எம்.முத்துக்குமாா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக சங்கத்தின் கெளரவ ஆலோசகா் டி.ஜி.மணி, சென்னை ஜெம்ஸ் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் ஏ.என்.ராஜசேகா், தொழிலதிபா் கே.குமரன், நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி, அரசு மருத்துவா் வே.காா்த்திக் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

நிகழ்ச்சியில், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 160 பேருக்கு புத்தாடை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 5 இரும்பு இருக்கைகள், செய்யாறு பாா்வையற்ற சங்க உறுப்பினா்கள் 100 பேருக்கு குடை, 3 அரசுப் பள்ளிகளுக்கு 7 மின் விசிறிகள், 5 நாற்காலிகள், ஏழைத் தொழிலாளி ஒருவருக்கு சலவைப் பெட்டி, வடதண்டலம் ஊராட்சிக்கு ஆயிரம் மரக்கன்றுகள் என ரூ.2 லட்சத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் ஏ.சிற்றரசு, ஆா்.மோகனம், எஸ்.திராவிடச் செல்வன், எஸ்.பாரதி, சட்ட ஆலோசகா் ஜான்பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.