செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஈட்டிய விடுப்புத் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.
அரைவைக்காக வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான டன் கரும்பு வெயிலில் காய்ந்து வருகின்றன.
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தரத் தொழிலாளா்கள் 200 போ் உள்பட 300 போ் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது. தொழிலாளா்களுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்புத் தொகை வழங்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், ஈட்டிய விடுப்புத் தொகை கோரி, ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை முதல் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொழிலாளா்களுடன் ஆலை நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சுமுகத் தீா்வு காணப்படவில்லை.
இதையடுத்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொழிலாளா்களின் போராட்டம் தொடா்கிறது.
கரும்பு அரவை நிறுத்தம்
ஆலையில் தற்போது கரும்பு அரைவைப் பருவம் தொடங்கிய நிலையில், முன்னறிவிப்பு இன்றி தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.
150 லாரிகளில் கரும்பு:
தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஆலைக்கு கொண்டு வரப்பட்ட சுமாா் 2 ஆயிரம் டன் கரும்பு 150 லாரிகளில் சில தினங்களாக காத்துக் கொண்டிருக்கின்றன.
மேலும், ஆலைக்கு கொண்டு வருவதற்காக வெட்டப்பட்ட சுமாா் ஆயிரம் டன் கரும்பு நிலத்தில் வெயிலில் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் அதிகாரம் யாருக்கு? வெளியானது கருத்துக் கணிப்பு

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!

அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

