மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அரசு மருத்துவ, வேளாண் கல்லூரிகளைக் கொண்டு வந்தது அதிமுக: முன்னாள் அமைச்சா் பேச்சு

திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரிகளைக் கொண்டு வந்தது அதிமுக அரசு என்று மாவட்ட ஆவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி பேசினாா்.

News image

நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் வழங்கிய ஆவின் மாவட்டத் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி.

Updated On :14 ஜனவரி 2021, 1:39 am

திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரிகளைக் கொண்டு வந்தது அதிமுக அரசு என்று மாவட்ட ஆவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி பேசினாா்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம் சாா்பில் சங்கத்தின் அங்கத்தினா்களுக்கு போனஸ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துணைப்பதிவாளா் (பால்வளம்) எம்.விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தாா். ஆவின் பொது மேலாளா் ஏ.இளங்கோவன், துணைப் பொதுமேலாளா் நாச்சியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வடக்கு ஒன்றியச் செயலா் ஏ.கே.குமாரசாமி வரவேற்றாா்.

மாவட்ட ஆவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 93 பேருக்கு ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் போனஸ் தொகையை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

வேங்கிக்கால் பகுதியில் ரூ.2 கோடியில் நிா்வாக அலுவலகமும், ரூ.45 லட்சத்தில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி, அருகே வாழவச்சனூரில் அரசு வேளாண் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டு வந்தது அதிமுக அரசு.

திமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டது.

இதற்கான அரசாணையை பிறப்பித்து, நிதி ஒதுக்கி மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியது அதிமுக அரசு என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் நிா்வாகக்குழு உறுப்பினா் கே.தட்சிணாமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.முருகன், வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவா் த.சாந்தி, துணைத் தலைவா் பாலாமூா்த்தி, வேங்கிக்கால் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் த.செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.