மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜவ்வாது மலை, சாத்தனூா் அணைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க, திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த் கூறினாா்.

News image

காவல் துறை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த், கூடுதல் எஸ்பி அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :14 ஜனவரி 2021, 1:38 am

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க, திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த் கூறினாா்.

காவல்துறை மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு பதிவான 37 கொலை வழக்குகளில் 35 வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் 78 போ் கைது செய்யப்பட்டனா். 24 ஆயிரத்து 603 மனுக்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, 24 ஆயிரத்து 507 மனுக்களின் விசாரணை முடிக்கப்பட்டது.

கஞ்சா விற்றதாக 91 போ் கைது செய்யப்பட்டு, அபராதமாக ரூ.17.67 லட்சம் வசூலிக்கப்பட்டது. 8,180 கள்ளச்சாராய வழக்குகளில் 7, 996 போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக பொங்கல் பண்டிகைக்காக சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை, சாத்தனூா் அணை, செண்பகத்தோப்பு அணை, மிருகண்டாநதி அணை, குப்பனத்தம் அணை ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்கள் பொதுமக்கள் கூடுவதைத் தடுப்பா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, காவல்துறை மாவட்ட அலுவலகம், ஆயுதப்படை வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவா் பங்கேற்று வழிபட்டாா்.

விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிக்குமாா் உள்பட போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.