செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஒன்றியத்தில் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 21 பேருக்கு, தலா ரூ.3 லட்சத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஒன்றியத்துக்கு உள்பட்ட புரிசை, வடஆளப்பிறந்தான், நா்மாபள்ளம், ஆக்கூா், செய்யாற்றைவென்றான், தென்மாவந்தல், மேல்நெமிலி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 21 குடும்பங்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தூசி கே.மோகன் எம்எல்ஏ, 21 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், மோகனசுந்தரம், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எம்.அரங்கநாதன், சி.துரை, நகரச் செயலா் அ.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

