தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மிஷலின் டயர் தொழிற்சாலையில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை அருகே அமைய இருக்கும் பிரான்ஸ் நாட்டின் "மிஷலின்' டயர் தொழிற்சாலையில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தகவல் துறை மேலாளர் சாரதாமணி டே தெரிவித்தார்.

News image
Updated On :6 அக்டோபர் 2012, 6:52 pm

அ. சர்ஃப்ராஸ்

சென்னை அருகே அமைய இருக்கும் பிரான்ஸ் நாட்டின் "மிஷலின்' டயர் தொழிற்சாலையில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தகவல் துறை மேலாளர் சாரதாமணி டே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் 290 ஏக்கரில் மிஷலின் டயர் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு டயர் உற்பத்தி தொடங்கும். இந்த ஆலையில் அடுத்த 7 ஆண்டுகளில் சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

இங்கு முதல் கட்டமாக, பஸ், லாரிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த ரேடியல் டயர்கள் தயாரிக்கப்படும். இந்திய சாலைகளுக்கு ஏற்ப சர்வதேச தரத்தில் டயர்கள் தயாரிக்கப்படும். இந்திய சந்தையில் மிஷலின் தனி இடத்தைப் பிடிக்கும். இந்தத் தொழிற்சாலையில் பணியாற்ற 1,500 பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி வாசியில் வசிக்கும் பெண்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

செப்டம்பர் 10ஆம் தேதி வரை 816 பேர் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச தரத்திலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிலர் தாய்லாந்தில் உள்ள மிஷலினின் ஆசிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள். பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உரிமம் பெற்று தொழிற்சாலையில் ஃபோர்க் லிப்ட் ஆபரேட்டர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியவத்துவம் அளிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜரோப்பிய, தாய்லாந்து உள்ளிட்ட 18 நாடுகளில் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் சென்னை தொழிற்சாலையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும். அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மொபைல் போன் பழுதுபார்ப்பு, கணினி பயிற்சி, பேக்கரி தொழில் உள்ளிட்ட சுய தொழில்கள் குறித்த பயிற்சி தரப்பட்டு வருகிறது என்றார் சாரதாமணி டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.