வங்கிகளுக்கான குறுகியகாலக் கடன் குறைப்பு: வீடு, வாகனக் கடன் சுமை குறையும்

வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகாலக் கடன்களஉக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி இன்று குறைத்தது.
வங்கிகளுக்கான குறுகியகாலக் கடன் குறைப்பு: வீடு, வாகனக் கடன் சுமை குறையும்
Updated on
1 min read

மும்பை: வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகாலக் கடன்களஉக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி இன்று குறைத்தது.

இதையடுத்து, வீட்டுகள் மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறையும் எனத் தெரிகிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. அப்போது, வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகாலக் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசும், தொழில் நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை கால் சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகியகால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 5.75 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும்.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் வட்டி விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன் பிறகு, ஆறுமாதங்கள் கழித்து வட்டி விகிதம் தற்போதுதான் குறைக்கப்படுகிறது.

பிற வர்த்தக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை ஏற்கெனவே 0.25%-0.50% குறைத்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் வீட்டு வசதி, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனியார் முதலீடுகளும் அதிகரிக்க இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை உதவியாக அமையும்.

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சிறப்பான அளவில் ஊக்குவிக்க உதவும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை ஏற்கெனவே குறைத்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை அவ்வங்கிகள் மேலும் வட்டியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com