நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தியாவில் ஜியோமியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலைகள்

: சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இந்தியாவில் மேலும் மூன்று புதிய ஸ்மார்ட்போன் ஆலைகளை அமைத்துள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 7:17 pm

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இந்தியாவில் மேலும் மூன்று புதிய ஸ்மார்ட்போன் ஆலைகளை அமைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநருமான மனு ஜெயின் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஜியோமிக்கு முன்னதாகவே இரண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. தற்போது தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் மேலும் கூடுதலாக மூன்று ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த ஆலைகள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டு கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய சந்தைகளில் ஜியோமி போன்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டு வருகிறது. எனவே, உள்நாட்டுத் தேவையை ஈடு செய்ய இந்த விரிவாக்கத் திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இதைத் தவிர, நொய்டாவில் ஹிப்பாட் நிறுவனத்துடன் கூட்டணி கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களையும் ஜியோமி தயாரித்து வருகிறது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.