விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

விஜயா வங்கியின் லாபம் 43% சரிவு

பொதுத் துறையைச் சேர்ந்த விஜயா வங்கியின் நிகர லாபம் முதல் காலாண்டில் 43.3 சதவீதம் சரிவடைந்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2018, 12:59 am IST

பொதுத் துறையைச் சேர்ந்த விஜயா வங்கியின் நிகர லாபம் முதல் காலாண்டில் 43.3 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் விஜயா வங்கியின் வருவாய் ரூ.3,935.77 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,510.11 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமான அளவாகும்.
வாராக் கடன் மேம்பட்டுள்ள நிலையிலும் வங்கியின் நிகர லாபம் ரூ.254.69 கோடியிலிருந்து 43.3 சதவீதம் சரிவடைந்து ரூ.144.34 கோடியாக இருந்தது.
ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 7.3 சதவீதத்திலிருந்து குறைந்து 6.19 சதவீதமானது. நிகர வாராக் கடன் விகிதமும் 5.24 சதவீதத்திலிருந்து சரிந்து 4.10 சதவீதமாக காணப்பட்டது என விஜயா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.