ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

5ஜி சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ

5ஜி சேவையை தொடங்கும் நோக்கத்துடன் ரேடிஸிஸ் கார்பரேஷன் தொலைதொடர்பு தொழில்நுட்ப சேவை நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது.

News image
Updated On :30 ஜூன் 2018, 12:28 pm

DIN

5ஜி சேவையை தொடங்கும் நோக்கத்துடன் ரேடிஸிஸ் கார்பரேஷன் தொலைதொடர்பு தொழில்நுட்ப சேவை நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது.

இந்திய தொலைதொடர்புத் துறை நிறுவனங்களில் முதன்முறையாக 4ஜி சேவையை மலிவு விலையில் அறிமுகப்படுத்தி அதன்மூலம் மாபெரும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் இந்தியாவின் பிரதான வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைதொடர்புத்துறை சேவை நிறுவனமாகவும் மிகவும் குறுகிய காலத்தில் உருவெடுத்தது.

இந்நிலையில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்து 5ஜி சேவையை விரைவில் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஜியோ நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், சர்வதேச தொலைதொடர்புத்துறை தொழில்நுட்ப சேவை நிறுவனமான ரேடிஸிஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை 75 மில்லியன் டாலர்கள் (ரூ.510 கோடி) மதிப்பில் வாங்கியுள்ளது.

இதில் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கின் மதிப்பையும் 1.72 டாலர்கள் என்ற மதிப்பில் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ-வின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில் 5ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலகளவில் புதிய தொழில்நுட்ப மைல்கல்லை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.