மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பி.கே. பிர்லா குழுமத்தின் சிமென்ட் பிரிவை கையகப்படுத்துகிறது அல்ட்ராடெக்

பி.கே. பிர்லா குழுமத்தைச் சேர்ந்த செஞ்சுரி டெக்டைல்ஸ் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்திப் பிரிவை கையகப்படுத்த, அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Updated On :21 மே 2018, 7:55 pm

பி.கே. பிர்லா குழுமத்தைச் சேர்ந்த செஞ்சுரி டெக்டைல்ஸ் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்திப் பிரிவை கையகப்படுத்த, அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, சிமென்ட் உற்பத்தித் துறையில் ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் நிலை மேலும் வலுவடையும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு திங்கள்கிழமை கூடி விவாதித்தது. அந்தக் கூட்டத்தில், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸின் சிமென்ட் உற்பத்திப் பிரிவை பங்குகள் பரிமாற்ற முறையின் கீழ் கையகப்படுத்த இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின்படி, ரூ.10 முகமதிப்பு கொண்ட 8 செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனப் பங்குகளுக்குப் பதிலாக, அதே முகமதிப்பு கொண்ட தலா ஒரு அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனப் பங்குகள் வழங்கப்படும்.
இந்த கையகப்படுத்தல், அல்ட்ராடெக் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.