திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ஹோண்டா: ஸ்கூட்டர் விற்பனை 2.5 கோடியைத் தாண்டி சாதனை

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனை 2.5 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:07 pm IST

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனை 2.5 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்)  யாவீந்தர் சிங் குலேரியா திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் தனது முதல் மாடல் ஸ்கூட்டரை கடந்த 2001-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், 13 ஆண்டுகளில் நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை 1 கோடியைத் தாண்டியது. அதேசமயம், வெறும் மூன்றே ஆண்டுகளில் கூடுதலாக 1 கோடி ஸ்கூட்டர்களை விற்று ஹோண்டா பெருமை தேடிக் கொண்டது.
தற்போது அந்த சாதனைகளை முறியடிக்கும் வகையில் ஒரே ஆண்டுக்குள் அடுத்த 50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்று சாதனை புரிந்துள்ளது.
இதையடுத்து, ஹோண்டா நிறுவனத்தின் மொத்த ஸ்கூட்டர்கள் விற்பனை 2.5 கோடி என்ற மைல் கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்கள் எங்கம் மீது வைத்திருக்கும் பற்றும், நம்பிக்கையுமே முக்கிய காரணம். இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்கூட்டர்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நிறுவனம் ஏற்கெனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றார் அவர்.
ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் ஹோண்டா 57 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், கிளிக், ஆக்டிவா மற்றும் கிரேஸியா மாடல் ஸ்கூட்டர்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.