டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொருளாதாரத்தை சீரமைக்க அசாதாரண நடவடிக்கை தேவைப்படுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர்

இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை சீரமைக்க அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்தார்.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:40 am

DIN

முன் எப்போதும் இல்லாத பொருளாதார சூழ்நிலையை சீரமைக்க அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுவதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக ஹீரோ நிறுவனத்தின் 2019 மைன்ட்மைன் கூட்டமைப்பில் ராஜிவ் குமார் பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பணப்புழக்கமும், அடுத்தவர் மீதான நம்பகத்தன்மையும் குறைந்துவிட்டது. குறிப்பாக தனியார் துறையில் இப்போக்கு அதிரித்து காணப்படுகிறது.  

கடந்த 4 ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வங்கி மோசடி உள்ளிட்டவற்றின் தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 10 முதல் 35 சதவீதம் வரை பணப்புழக்கம் இருந்து வந்தது மக்களுக்கு உதவிகரமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது மக்கள் மத்தியில் பணப்புழக்கம் மிகவும் குறைந்துவிட்டது.

இதுபோன்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை சீரமைக்க அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.