மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச் சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து வர்த்தகம்

கடந்த 10 ஆண்டுகளில் ஒரே  நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். 

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 4:43 am

பங்குச் சந்தையில் திங்கள்கிழமை (செப்.23) வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 991.17 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து, 39,005.79 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.

அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 புள்ளிகள் வரை சென்றது. 

முன்னதாக, பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் (5.32%)  அதிகரித்து 38,014 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 569 புள்ளிகள் (5.32%) உயர்ந்து 11,274 புள்ளிகளில் நிலைபெற்றது.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரே  நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.