ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான 'வாட்ஸ்ஆப் பே' செயலி எப்போது வரும்?

வாட்ஸ்ஆப் பயனர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வாட்ஸ்ஆப் பே செயலி இன்னும் 6 மாதங்களில் உலகம் முழுவதுமே அறிமுகப்படுத்தப்படும் என்று மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 பிப்ரவரி 2020, 10:41 am

DIN

வாட்ஸ்ஆப் பயனர்கள் அதிகம் எதிர்பார்க்கும் 'வாட்ஸ்ஆப் பே' செயலி இன்னும் 6 மாதங்களில் உலகம் முழுவதுமே அறிமுகப்படுத்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப் செயலி தற்போது பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. உலக அளவில் 80 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், கூகுள் பே, போன் பே போன்று ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கென 'வாட்ஸ்ஆப் பே' செயலியை கொண்டுவரவுள்ளது. ஏற்கெனவே இதற்கான சோதனை முயற்சிகள் உலகம் முழுவதுமே நடைபெற்றன. இந்தியாவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு பைலட் மோடு முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்ஆப் பே செயலி இன்னும் 6 மாதங்களில் உலகம் முழுவதுமே அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது வாட்ஸ் ஆப்பில் எவ்வாறு ஒரு புகைப்படத்தை, வீடியோவை உடனடியாக அனுப்புகிறீர்களோ அதுபோன்று வாட்ஸ் ஆப் பே மூலமாக மிக எளிதாக விரைவாக பணம் அனுப்ப முடியும் என்று மார்க் தெரிவிக்கிறார்.

வாட்ஸ் ஆப் செயலி உலகம் முழுவதும் உள்ள மக்கள் உபயோகிக்கும் முக்கிய செயலியாக உள்ளது. அவ்வாறு இருக்கையில், வாட்ஸ் ஆப் பேவும் மக்களிடையே அதிகம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.