காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளன. 

News image
Updated On :19 மார்ச் 2020, 5:10 am

DIN

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 10.15 மணியளவில் 1,571 புள்ளிகள் குறைந்து 27,299 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 456 புள்ளிகள் குறைந்து 8,013 புள்ளிகளில் வர்த்தகமானது. 

முன்னதாக, காலை 9.23 மணியளவில் சென்செக்ஸ் 1,991 புள்ளிகள் வரை குறைந்து காணப்பட்டது. நிப்டி 575.25 புள்ளிகள் குறைந்தன. 

கச்சா எண்ணெய் விலை குறைவு, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. 

இன்று பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக பாரதி இன்ப்ராடெல், யெஸ் பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.