6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இணைய சேவை வழங்க இணையும் மைக்ரோசாஃப்ட் - ஈரோஸ் நவ்

இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் வெற்றிகரமாக ஈரோஸ் நவ் சேவையை அளிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2020, 10:43 am

DIN


இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் வெற்றிகரமாக ஈரோஸ் நவ் சேவையை அளிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் அஸூர் மற்றும் ஈரோஸ் நவ் இணைந்து இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் ஈரோஸ் நவ் சேவையை குறைந்த அலைவரிசையை கொண்டு அளித்துள்ளது.

இதுகுறித்து அஸூர் நிறுவன துணைத் தலைவர் ரவி கிருஷ்ணசுவாமி கூறுகையில்,

“இந்தியா முழுவதும் குறைந்த அலைவரிசை இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் உள்ளடக்கத்தை அணுக உதவுவதன் மூலம், நாங்கள் சில்லறை விநியோக வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும்” என தெரிவித்தார். 

ஈரோஸ் நவ் பதிவேற்றும் விஷயங்களை மைக்ரோசாஃப்ட் அஸூரின் மைய களஞ்சியத்தில் இருந்து மற்ற விநியோக மையங்களுக்கு அனுப்பி விரைவாக செயல்படுத்தி வருகிறோம்.

இணைய இணைப்பு இல்லாமல் நுகர்வோர் தங்கள் மொபைல் சாதனங்களில் உள்ளடக்கத்தை பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்ய விநியோக மையங்கள் உதவியாக இருகின்றது.

இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த அலைவரிசை பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் விரைவாக ஈரோஸ் நவ்வை அனுகலாம்.

இதுகுறித்து ஈரோஸ் நவ் தலைமை நிர்வாக அதிகாரி அலி ஹுசைன் கூறுகையில்,

“மைக்ரோசாஃப்டின் கிளவுடை பயன்படுத்துவதன் மூலம் அலைவரிசை குறைவாக உள்ள பகுதிகளில் வாடிக்கையாளர்களை விரைவாக அனுக முடிகிறது. இதன்மூலம் சந்தை தேவைகளை பூர்த்தி செய்து தொடர்ந்து சேவையை அளிக்க முடிகிறது” என தெரிவித்தார்.

எதிர்வரும் மாதங்களில், இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர் இந்த சேவையை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதற்காக நிறுவனங்கள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.