விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை வணிகத்தில் வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் காணப்படுகின்றன. சென்செக்ஸ் 351 புள்ளிகளும், நிஃப்டி 102 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2021, 5:07 am


பங்குச்சந்தை வணிகத்தில் வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

சென்செக்ஸ் 351 புள்ளிகளும், நிஃப்டி 102 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 48,149.96 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.56 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102 புள்ளிகள் உய்ர்ந்து 14,387.50 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.53 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் தர 30 நிறுவனங்களின் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன. மற்ற 8 நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.

அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் 4.07 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஓ.என்.ஜி.சி 3.67 சதவிகிதமும், பஜாஜ் ஃபின்சர்வ் 3.66 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 2.71 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.