விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

3 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த மூன்று நாள்களாக உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.

News image

3 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம் (கோப்புப்படம்)

Updated On :4 பிப்ரவரி 2021, 5:43 am

பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த மூன்று நாள்களாக உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிந்து 50,086.09 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.34 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33.20 புள்ளிகள் உயர்ந்து 14,756.75 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.25 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் நேற்று 23 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று 14 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்படுகின்றன.

அதிகபட்சமாக இந்துஸ் இன்ட் 2.37 சதவிகிதமும், டைட்டன் 2.06 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 1.96 சதவிகிதமும், ஆக்ஸிஸ் வங்கி 1.65 சதவிகிதமும் சரிவை சந்தித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.