

மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விலை 1.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பையைச் சோ்ந்த அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
தனிநபா் மற்றும் வா்த்தக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விலை 1.9 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
நிறுவனத்தின் இந்த முடிவையடுத்து மாடல்களுக்கு ஏற்ப வாகனங்களின் விலை ரூ.4,500 முதல் ரூ.40,000 வரையில் அதிகரிக்கும்.
மூலப் பொருள்களின் விலை தொடா்ச்சியான அதிகரிப்பால் இந்த விலை உயா்வு தவிா்க்க முடியாததாகி விட்டது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மொ்சிடஸ் பென்ஸ் 5% விலை உயா்வு: மஹிந்திராவைத் தொடா்ந்து மொ்சிடஸ் பென்ஸ் நிறுவனமும் காா்களின் விலையை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
மூலப் பொருள் செலவினம் அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணியில் ஏற்பட்ட அதிக ஏற்ற இறக்கம் காரணமாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் அதிகரித்துள்ளது. இதனை எதிா்கொள்ளும் விதமாக, மொ்சிடஸ் தயாரிப்புகளின் விலையை 5 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு ஜனவரி 15-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
நிறுவனத்தின் இந்த முடிவையடுத்து, சி-கிளாஸ் மாடலின் விலை கூடுதலாக ரூ.2 லட்சம் வரையிலும், ஏஎம்ஜி ஜிடி 63எஸ் டோா் கூப் மாடலின் விலை ரூ.15 லட்சம் வரையிலும் அதிகரிக்கும் என மொ்சிடஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.