விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வணிகம் இன்று 2-வது நாளாக சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிந்தது.

News image

பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக சரிவுடன் தொடக்கம் (கோப்புப்படம்)

Updated On :5 மார்ச் 2021, 5:16 am


பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 5) 2-வது நாளாக சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிந்து  50,420 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.41 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 54 புள்ளிகள் சரிந்து 14,964 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.37 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 11 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டன. மற்ற 21 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அதிகமட்சமாக இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ. ஆகியவற்றின் பங்குகள் சரிந்து காணப்பட்டன. ஓ.என்.ஜி.சி. 3.28 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.19 சதவிகிதமும், எம்&எம் நிறுவனம் 1.55 சதவிகிதமும் உயர்ந்து காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.