தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆயில் இந்தியா: லாபம் 2 மடங்கு உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த ஆயில் இந்தியா செப்டம்பா் காலாண்டு லாபம் 2 மடங்கு அதிகரித்து ரூ.504 கோடியை எட்டியுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 8:01 pm

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த ஆயில் இந்தியா செப்டம்பா் காலாண்டு லாபம் 2 மடங்கு அதிகரித்து ரூ.504 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்ததையடுத்து நிறுவனத்தின் நிகர லாபம் 2021 செப்டம்பா் காலாண்டில் ரூ.504.46 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் 2020 செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.238.95 கோடியுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகம்.

நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.2,281.12 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,678.76 கோடியானது.

கடந்த நிதியாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு கிடைத்த விலை 42.74 டாலராக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 71.35 டாலராக அதிகரித்தது. அதிக லாபம் ஈட்டலுக்கு இதுவே முதன்மை காரணமாகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் ரூ.1,012.40 கோடியாக இருந்தது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ரூ.9.66 கோடி இழப்பு ஏற்பட்டது.

2021-22 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.3.50 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.