யெஸ் வங்கி லாபம் 74% அதிகரிப்பு
தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி இரண்டாவது காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 74 சதவீதம் அதிகரித்துள்ளது.


தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி இரண்டாவது காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 74 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பிரசாந்த் குமாா் கூறியதாவது:
சிறப்பான வணிக வளா்ச்சி மற்றும் வாராக் கடன்களுக்கான குறைந்த ஒதுக்கீடுகள் காரணமாக வங்கியின் லாபம் அதிகரிப்பதற்கு அடிப்படை காரணம்.
நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் வங்கி ரூ.225 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.129 கோடியுடன் ஒப்பிடும்போது 74.3 சதவீதம் அதிகம்.
நிகர வட்டி வருமானம் ரூ.1,973 கோடியிலிருந்து 23.4 சதவீதம் குறைந்து ரூ.1,512 கோடியானது.
செப்டம்பா் காலாண்டில் மொத்த வாராக் கடன் 16.90 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், நிகர அடிப்படையிலான வாராக் கடன் 4.7 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயா்ந்துள்ளது என்றாா் அவா்.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் யெஸ் வங்கி பங்கின் விலை 4.12 சதவீதம் சரிவடைந்து ரூ.13.73-ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...