மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பங்குச்சந்தை வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் புதிய உச்சம்!

வர்த்தக தொடக்கத்தில், வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 356 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 4:52 am

DIN

வர்த்தகத் தொடக்கத்தில், வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 356 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 59 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. 

இன்று (வெள்ளிக்கிழமை) சென்செக்ஸ் 356.95 புள்ளிகள் உயர்ந்து 59,498.11 என்ற புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. காலை 10.15 மணியளவில் 475.90 புள்ளிகள் உயர்ந்து 59,617.06 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 'நிஃப்டி' இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில் 103 புள்ளிகள் அதிகரித்து, 17,732.70 என்ற புள்ளிகளில் தொடங்கி தற்போது 131.70 புள்ளிகள் உயர்ந்து 17,761.20ல் வர்த்தகம் ஆகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.