47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வங்கிகள் வழங்கிய கடன் 6.7% அதிகரிப்பு

வங்கிகள் வழங்கிய கடன் செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 9:03 pm

DIN

வங்கிகள் வழங்கிய கடன் செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

வங்கிகள் வழங்கிய கடன் செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.109.12 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோன்று, அவை திரட்டிய டெபாசிட்டும் 9.32 சதவீதம் அதிகரித்து ரூ.155.75 லட்சம் கோடியாக காணப்பட்டது.

2020 செப்டம்பா் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.102.27 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.142.47 லட்சம் கோடியாகவும் இருந்தது.

2021 ஆகஸ்ட் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 6.67 சதவீதமும், டெபாசிட் 9.45 சதவீதமும் அதிகரித்துள்ளன.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன்5.56 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 11.4 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.