ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பெப்பிளின் புதிய ஸ்மார்ட் வாட்சுகள் அறிமுகம்

இந்தியாவில் பெப்பிள் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்சுகள் திங்கள்கிழமை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
பெப்பிள் காஸ்மோ ப்ரோ
Updated On :13 ஏப்ரல் 2022, 11:33 am

DIN

இந்தியாவில் பெப்பிள் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்சுகள் திங்கள்கிழமை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெப்பிள் காஸ்மோ ப்ரோ எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு வாட்சுகளிலும் ஆக்ஸிஜன் அளவு மற்றும் இதய துடிப்பை கணக்கீடு செய்யப்படும் தொழில்நுட்பம் உள்ளன. மேலும், போன் செய்யும் வசதிகளுடன் மைக் பொருத்தப்பட்ட இந்த வாட்சுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாள்கள் உபயோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.7 இன்ச் எச்டி டிஸ்பிளே கொண்ட இந்த வாட்சானது, அமேசான் மற்றும் பெப்பிள் இணையதளத்தில் ரூ. 3,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த புதிய வாட்சுகள் குறித்து பெப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் கோமல் அகர்வால் கூறியதாவது:

எங்கள் வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியாக இந்த இரு வாட்சுகளையும் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.