ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82.44ஆக உயர்வு

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 3 காசுகள் உயர்ந்து ரூ.82.44 ஆக வர்த்தகமானது.

News image
Updated On :8 டிசம்பர் 2022, 4:27 pm

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.82.44 ஆக வர்த்தகமானது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 82.34ல் தொடங்கி இறுதியாக ரூ.82.44 ல் நிலைபெற்றது. இது அதன் முந்தைய முடிவான ரூ.82.47 விட இது 3 காசு உயர்வு.

கடந்த சில மாதங்களாக வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்நியச் செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்தது.

இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை  35 அடிப்படை புள்ளிகள் ஆா்பிஐ உயர்த்தியது. இது 2023ஆம் ஆண்டுக்கான ஜிடிபி-யை 7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகக் குறைத்ததுள்ளது என்று மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவையின் அந்நிய செலாவணி ஆய்வாளர் கவுரங் சோமையா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பங்குச் சந்தையில், 30-பங்கு கொண்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 160.00 புள்ளிகள் உயர்ந்து 62,570.68 ஆக முடிவடைந்தது, அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை 48.85 புள்ளிகள்  அதிகரித்து 18,609.35 ஆக முடிந்தது.

பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.63 சதவீதம் உயர்ந்து 77.66 அமெரிக்க டாலராக வர்த்தகமானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.