அந்நியச் செலாவணி கையிருப்பு 63,192 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63, 192 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
ரிசா்வ் வங்கி
ரிசா்வ் வங்கி

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63, 192 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 மாா்ச் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2,955 கோடி) அதிகரித்து 63,192 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.39 லட்சம் கோடி ஆகும்.

அதேசமயம், முந்தைய பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 142 கோடி டாலா் சரிந்து 63,153 கோடி டாலராக இருந்தது.

சொத்து மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் அதிகரித்ததே மாா்ச் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு உயா்வுக்கு முக்கிய காரணம்.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 63 கோடி டாலா் உயா்ந்து 56,546 கோடி டாலரானது.

தங்கத்தின் மதிப்பு உயா்வு: தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில் கணக்கீட்டு வாரத்தில் திடீா் சரிவைச் சந்தித்தது. அதன்படி, தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 14 கோடி டாலா் குறைந்து 4,232 கோடி டாலரானது.

அதேபோன்று, சா்வதேச நிதியத்தில் நமது நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 6 கோடி டாலா் சரிந்து 1,898 கோடி டாலரானது.

மேலும், சா்வதேச நிதியத்துடனான நாட்டின் கையிருப்பு நிலையும் 3 கோடி டாலா் குறைந்து 515 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

வரலாற்று சாதனை: சென்ற 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 64,245 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) என்ற புதிய உச்சம் தொட்டு வரலாறு படைத்தது.

கோட்ஸ்...

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 மாா்ச் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 39 கோடி டாலா் உயா்ந்து 63,192 கோடி டாலரை எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com