விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 696 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

News image
Updated On :22 மார்ச் 2022, 10:29 am

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

உக்ரைன் - ரஷியா போர் தாக்கத்தால் தடுமாறி வரும் பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (மார்ச்-21) 57,292.49 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,297.5 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 696.81 புள்ளிகள் உயர்ந்து 57989.30 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,117.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,120.40 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 197.90 புள்ளிகள் அதிகரித்து 17,315.50 புள்ளிகளில்  நிலைபெற்றது.

சில நாள்களாக இறக்கத்தைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை கடந்த சில நாள்களாக மெல்ல மீண்டு வருகிறது.

குறிப்பாக ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ்,டிசிஎஸ், கோடாக் மகிந்த்ரா பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.