ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் ரூ.20,000 கோடி? அமேசான் முதலீடு

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. 

News image
Updated On :30 மே 2022, 4:51 pm IST

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. 

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தி கென் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. ஏற்கெனவே அதிக அளவு கடன் பிரச்னையில் சிக்கியுள்ள இந்த நிறுவனம் முதலீடுகளை எதிர்பாத்து காத்திருந்த நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளது.

வோடஃபோன் - ஐடியா நிறுவனம் திவாலாகும் நிலைமையிலுள்ளதால், அரசு உதவியை நாடியிருந்தது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதால், இழப்பை ஈடுசெய்யும் வகையில் கட்டணங்களையும் உயர்த்தியது. 

இந்நிலையில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளதால், வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகள் பெருளவு விற்பனையாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.