புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஏர்டெல் பங்குகள் உயர்வு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை சரிவுடன் நிறைவடைந்தன.

News image
கோப்புப் படம்
Updated On :6 செப்டம்பர் 2022, 11:17 am

DIN


பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை சரிவுடன் நிறைவடைந்தன. திங்கள் கிழமையான நேற்று வணிகம் ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று சரிவைச் சந்தித்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48.99  புள்ளிகள் சரிந்து 59,196.99 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.083 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.20 புள்ளிகள் சரிந்து 17,655.60 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.058 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதில் அதிகபட்சமாக தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் 2.79 சதவிகிதம் உயர்வு கண்டது. இதற்கு அடுத்தபடியாக என்டிபிசி நிறுவன பங்குகள் 2.56 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 1.54 சதவிகிதமும், ரிலையன்ஸ் 0.98 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

இதேபோன்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.31 புள்ளிகள் எதிர்மறையாக சரிந்து மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.