47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரூ.1,712 கோடி ஈவுத் தொகை: அரசுக்கு வழங்கியது யூனியன் வங்கி

 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு ரூ.1,712 கோடி ரூபாயை பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கி வழங்கியுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 5:55 pm

DIN

 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு ரூ.1,712 கோடி ரூபாயை பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கி வழங்கியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மாா்ச் வரையிலான நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக, ரூ.1,712 கோடியை மத்திய அரசுக்கு வங்கி அளித்துள்ளது. இது, மத்திய அரசுக்கு வங்கி அளித்துள்ள அதிகபட்ச ஆண்டு ஈவுத் தொகையாகும்.அண்மையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அதற்கான காசோலையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வங்கியின் நிா்வாக இயக்குநா் மணிமேகலை வழங்கினாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.