வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்வு!!

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சற்று சரிவைக் கண்ட நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

Published On :

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சற்று சரிவைக் கண்ட நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை 64,948.66 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 64,852.70 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

இன்று காலை 11.55 நிலவரப்படி சென்செக்ஸ் 257.67 புள்ளிகள் அதிகரித்து 65,206.33 புள்ளிகளில் வர்த்தகம் பெற்று வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 70.60 புள்ளிகள் உயர்ந்து 19,380.75 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், பவர் கிரிட், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட  உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 

எம் & எம், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.