சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

'தார்' மாடலில் புதிய வாகனம்! அறிமுகம் செய்தது மஹிந்திரா!

மஹிந்திரா & மஹிந்திரா இன்று (ஜனவரி 09) திங்கள்கிழமையன்று அதன் பிரபலமான மாடலான 'தார்' ஸ்போர்ட்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

News image
Updated On :22 ஜூலை 2025, 4:01 pm IST

மஹிந்திரா & மஹிந்திரா இன்று (ஜனவரி 09) திங்கள்கிழமையன்று அதன் பிரபலமான மாடலான தார் ஸ்போர்ட்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

புதிய மாடலானது ரியர் வீல் டிரைவ் திறனுடன் வருகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு  விற்பனைக்கு வருகிறது என்று மஹிந்திரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டீசலில் இயங்கும் மேனுவல் ரியர் வீல் டிரைவ் வண்டியின் விலையானது ரூ.9.99 லட்சம் முதல்  ரூ.10.99 லட்சம் வரை இருக்கும்.  அதே வேளையில் பெட்ரோலில் இயங்கும்  ஆட்டோமேட்டிக் வெர்ஷன் விலையானது ரூ.13.49 லட்சம் ஆகும்.

மஹிந்திரா தார் தனது 4-வீல் டிரைவ் வகைகளில் தற்போது எலெக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குரலுக்கு தொடர்ந்து செவிசாய்த்து வருகிறோம். பல முக்கிய மேம்பாடுகளுடன் 'தார்' மாடலை வடிவமைத்துள்ளோம் என்றார் மஹிந்திரா & மஹிந்திராவின் வாகனப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.