நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐ-போன் உற்பத்தி ஆலையை வாங்குகிறது டாடா நிறுவனம்!

இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :10 ஜனவரி 2023, 11:56 am

DIN

இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக செய்தி நிறுவனமான புளூம்பர்க் அளித்துள்ள தகவலின்படி, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவடையும். ஐ-போன் உற்பத்தி செய்யும் இந்தியாவிலேயே செய்யும் முதல் நிறுவனமாக விஸ்ட்ரான் உள்ளது. விஸ்ட்ரான் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர்கள் (ரூ.4,920 கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது. 

விஸ்ட்ரான் நிறுவனம் தாய்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஐ-போன் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கினால், ஐ-போனை இந்தியாவில் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.