இந்தியாவின் காற்று மாசுபாட்டைக் குறைக்க மின்னணு கார்கள் மட்டுமே தீர்வல்ல என சுஸுகி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவரான டோஷிஹிரோ சுஸுகி தெரிவித்துள்ளார்.
நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் சுஸுகி நிறுவனத்தின் இவிஎக்ஸ் என்ற புதிய காரை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் 2025 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் அந்நிறுவனத்தின் தலைவரான டோஷிஹிரோ சுஸுகி தெரிவித்தார்.
அப்போது உலகம் வெப்பமடைந்து வருவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் காற்றில் உள்ள கார்பன் அளவைக் குறைக்க மின்னணு கார்கள் மட்டுமே தீர்வல்ல எனக் குறிப்பிட்டார்.
மேலும், மின்னணு கார்களுடன், பாதுகாப்பான சாதனங்களை அறிமுகம் செய்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் இந்தியாவில் அவசியம் எனத் தெரிவித்தார்.
நிறுவனம் பெரிய முதலீடுகளைச் செய்யாமல் இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவேற்ற சுஸுகி முயற்சிக்கும் என்றும்,
சிறிய ரக கார்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



