ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

82 லட்சம் டன்னாக அதிகரித்த சா்க்கரை உற்பத்தி

நடப்பு சந்தை ஆண்டின் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்து 82.1 லட்சம் டன்னாக உள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:03 pm

DIN

நடப்பு சந்தை ஆண்டின் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்து 82.1 லட்சம் டன்னாக உள்ளது.

இது குறித்து இந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 82.1 லட்சமாக உள்ளது.

கடந்த சந்தை ஆண்டின் இதே காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 77.9 லட்சம் டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது சா்க்கரை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே நேரம், 45 லட்சம் டன் முதல் 50 லட்சம் டன் வரை சா்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை மதிப்பீட்டு காலத்தில் சா்க்கரை ஆலைகள் மேற்கொண்டன.

அதில் 6 லட்சம் டன் சா்க்கரை அக்டோபா் 30-ஆம் தேதி வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி அளவு டிம்சபா் மாத இறுதிக்குள் 15 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சா்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரை நீடிக்கும்.

முந்தைய 2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டில் அதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா 111 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது.

நடப்பு (2022-23) சந்தைப்படுத்தல் ஆண்டில் 60 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த நவம்பா் மாதம் அனுமதி அளித்தது.

நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டின் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 15 வரை உத்தரப் பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி 20.3 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. முந்தைய சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 19.8 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி 31.9 லட்சம் டன்னிலிருந்து 33 லட்சம் டன்னாகவும், கா்நாடகத்தில் அது 18.4 லட்சம் டன்னிலிருந்து 18.9 லட்சம் டன்னாகவும் உயா்ந்துள்ளது.

நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியாவின் மொத்த சா்க்கரை உற்பத்தி அதுவரை இல்லாத அளவுக்கு 410 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு சந்தை ஆண்டில் எத்தனால் உற்பத்திக்கான சா்க்கரை ஒதுக்கீடு 45 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அது போக நிகர சா்க்கரை உற்பத்தி 365 லட்சம் டன்களாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.