சென்செக்ஸ் 1,000 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி முதல்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
நேற்று(செவ்வாய்க்கிழமை) 62,970 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 1.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1,056.93 புள்ளிகள் அதிகரித்து 64,026.93 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 317.45 புள்ளிகள் உயர்ந்து 19,008.65 புள்ளிகளில் இருந்து வருகிறது. இதன் மூலமாக நிஃப்டி முதல்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்துள்ளன.
அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அதேநேரத்தில் கோடாக் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎப்சி லைப், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை இறக்கம் கண்டு வருகிறது.
இதையும் படிக்க | மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!