சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஈஐடி பாரி லாபம் ரூ.286.90 கோடியாக உயர்வு

சர்க்கரை உற்பத்தியாளரான ஈஐடி பாரி (இந்தியா) லிமிடெட் மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தை ரூ.286.90 கோடியாக பதிவு செய்துள்ளது.

News image
eid_parry065223
Updated On :1 பிப்ரவரி 2024, 7:01 pm

DIN

சென்னை: சர்க்கரை உற்பத்தியாளரான ஈஐடி பாரி (இந்தியா) லிமிடெட் மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.286.90 கோடியாக பதிவு செய்துள்ளது.

முருகப்பா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்நிறுவனம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.428.96 கோடியாக பதிவு செய்துள்ளது.

2023 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.1,573.70 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,827.74 கோடியானது.

மதிப்பீட்டு காலாண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.5,756.35 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,865.28 கோடியானது.

2023 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.23,743.798 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.35,283.02 கோடியானது.

சர்க்கரைப் பிரிவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு லாபம் ரூ.176 கோடியாகவும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.194 கோடியாகவும் இருந்தது.

வேளாண் இடுபொருட்கள் பிரிவு கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.397 கோடியிலிருந்து ரூ.432 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் நிதி செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஈஐடி பாரி நிர்வாக இயக்குனர் எஸ்.சுரேஷ், சிறந்த விற்பனை வருவாய் மற்றும் அதிகரித்த உள்நாட்டு விற்பனை அளவு காரணமாக சர்க்கரை பிரிவின் முழுமையான செயல்பாட்டு லாபம் முந்தைய ஆண்டை விட சிறப்பாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.