புது தில்லி, ஏப். 25: மத்திய உருக்குத் துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் (செயில்) வருடாந்திர விற்பனை கடந்த 2023-24 நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் கச்சா எஃகு உற்பத்தி 1.92 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.
அதே போல், மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனத்தின் உருக்கு இரும்பு உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து 2.05 கோடி டன்னாக உள்ளது.
2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் விற்கக்கூடிய எஃகு உற்பத்தி 7 சதவீதம் உயா்ந்து 1.84 கோடி டன்னாக உள்ளது.
மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் உயா்ந்து 1.71 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகம். மேலும், இது நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 768.1 மில்லியன் டன்னாக சரிவு!

தரமான கரும்பு விதை உற்பத்தி குறித்த கருத்தரங்கு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


