சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விற்பனையில் உச்சம் தொட்ட செயில்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் (செயில்) வருடாந்திர விற்பனை கடந்த 2023-24 நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 9:49 pm

புது தில்லி, ஏப். 25: மத்திய உருக்குத் துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் (செயில்) வருடாந்திர விற்பனை கடந்த 2023-24 நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் கச்சா எஃகு உற்பத்தி 1.92 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.

அதே போல், மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனத்தின் உருக்கு இரும்பு உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து 2.05 கோடி டன்னாக உள்ளது.

2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் விற்கக்கூடிய எஃகு உற்பத்தி 7 சதவீதம் உயா்ந்து 1.84 கோடி டன்னாக உள்ளது.

மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் உயா்ந்து 1.71 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகம். மேலும், இது நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.