எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் இறக்குமதி செய்ய இனி அனுமதி பெற வேண்டும்!

மடிக்கணினிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்ய நிறுவனங்கள், இனி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில், அதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 13 முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

News image

மடிக்கணினிகள்

Updated On :11 டிசம்பர் 2024, 9:21 pm IST

புதுதில்லி: மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்ய நிறுவனங்கள், இனி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில், அதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 13 முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் குறித்த கவலைகளை தொழில்துறையினர் சுட்டிக்காட்டிய பிறகு, கடந்த ஆண்டு அக்டோபரில் அரசு இந்த பொருட்களின் இறக்குமதிக்கான வழங்கப்பட்ட எந்தவொரு அங்கீகாரமும் 2025 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்று தெரிவித்தது. அதே வேளையில், இறக்குமதியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க அனுமதியும் வழங்கியது.

அதே வேளையில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், 2025 ஆண்டிற்கான தடை செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை அறிவித்தது. முன்னதாக செப்டம்பரில், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட சில தகவல் தொழில்நுட்ப பெருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்போதைய ஒப்புதல் முறையை, டிசம்பர் 31 வரை நீட்டித்தது.

முதலில் மடிக்கணி, டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா-ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மீதான இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 3, 2023ல் அறிவித்தது.

நவம்பர் 1, 2023 முதல் புதிய முறையை அமல்படுத்திய முதல் நாளில், கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரிய ஆப்பிள், டெல் மற்றும் லெனோவா உள்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

2021-22ஆம் ஆண்டில் இறக்குமதி சுமார் 7.37 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது, 2022-23ல் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர் மடிக்கணினிகளை இறக்குமதி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.