மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11-ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11 ஆக நிலைபெற்றது.

News image

இந்திய ரூபாய்

Updated On :23 டிசம்பர் 2024, 6:10 pm IST

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11 ஆக நிலைபெற்றது.

அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலர் தேவை காரணமாக ரூபாய் இன்று பலவீனமாக இருந்தது. மேலும், நிலையற்ற அரசியல் சூழ்நிலையால் கச்சா எண்ணெய் சற்று உயர்ந்து முடிந்து அனைவரின் உணர்வுகளை சரிய செய்தது.

அதே வேளையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் 2025ல் எதிர்பார்த்ததை விட மெதுவாக வட்டி விகிதக் குறைப்பை தொடங்கும் என்பதால் டாலர் குறியீடு உயர்ந்தே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.02 ஆக வர்த்தகமான நிலையில், ரூ.85.13 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது. இறுதியில் ரூ.85.11ஆக நிலைபெற்றது.

அதே வேளையில், வெள்ளிக்கிழமை அன்று வர்த்தக முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.85.04-ஆக இருந்தது.

இது குறித்து அனுஜ் செளவுத்ரி தெரிவித்ததாவது:

மிரே அசெட் ஷேர்கான் நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வாளரான அனுஜ் செளவுத்ரி கூறுகையில், அமெரிக்க நாணயத்தின் வலுவான தேவைக்கு மத்தியில் ரூபாயின் இன்றைய மதிப்பு சரிந்த நிலையில், சீன யுவான் மதிப்பும் பலவீனமாக இருப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.