கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதிக ஏற்ற இறக்கங்களுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

நிலையற்ற அமர்வில் இன்று, பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஓரளவு சரிந்து முடிவடைந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :24 டிசம்பர் 2024, 11:18 am

DIN

மும்பை: நிலையற்ற அமர்வில் இன்று, பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஓரளவு சரிந்து முடிவடைந்தது. நிஃப்டி 23,700 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்ற நிலையில், ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு மற்றும் எஃப்எம்சிஜி ஆகிய துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்குவதில் கவனம் செலுத்தினர்.

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 67.30 புள்ளிகள் சரிந்து 78,472.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 25.80 புள்ளிகள் சரிந்து 23,727.65 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

கலவையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில், இந்திய குறியீடுகள் ஏற்ற இறக்கங்களுடன் தொடங்கியது. இதில் ஆட்டோ, எனர்ஜி, எஃப்எம்சிஜி ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் நிஃப்டி குறியீடு சற்று உயர்ந்த நிலையில், லாப பதிவு தொடங்கியதால் சிறிய மாற்றத்துடன் முடிந்தது.

பவர் கிரிட் கார்ப், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ், டைட்டன் மற்றும் எஸ்.பி.ஐ ஆகியவை நிஃப்டியில் சரிந்து முடிந்தது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பிபிசிஎல் மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்து முடிந்தது.

துறை வாரியாக ஆட்டோ, எஃப்எம்சிஜி, எண்ணெய் & எரிவாயு ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் இன்று கொள்முதல் செய்த நிலையில், ஐடி, ஊடகம், உலோகம், பொதுத்துறை வங்கி ஆகிய பங்குகளை விற்பனை செய்தனர். பிஎஸ்இ மிட்கேப் குறியீடு ஏற்ற இறக்கங்களுடன் முடந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு 0.3 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.62 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 73.08 டாலராக உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை (டிசம்பர் 25) பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.