கடனில் சிக்கியுள்ள தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ரூ.20,000 கோடி பங்கு மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மிகவும் தாமதமாகி வரும் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காகவும், தற்போது நிறுவனம் வழங்கி வரும் 4ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் பங்கு வெளியீடு மூலம் கூடுதலாக ரூ.20,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு அண்மையில் வழங்கியுள்ளது. இது தவிர, கடன்கள் மற்றும் பங்கு வெளியீடு மூலம் மேலும் ரூ.45,000 கோடி மூலதனம் திரட்டவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலதனம் திரட்டப்பட்டால், முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாா்தி ஏா்டெல்லுக்கு இணையான சேவைகளை வோடஃபோன் ஐடியாவால் வழங்க முடியும் என்று கருதப்படுகிறது.
தொடர்புடையது

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 4.13 லட்சம் கோடியாக உயர்வு!

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம்: ரூ.30,024 கோடிக்கு வீடுகள் விற்பனை!

மதிப்புமிக்க 6 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 65,000 கோடியாக சரிவு!

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 1.75 லட்சம் கோடியாக சரிவு!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


