புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில், டயர் ஏற்றுமதி ரூ.23,073 கோடியாக அதிகரித்துள்ளது என வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில், பொருளாதார மந்தநிலை, அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் டயர் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிதியாண்டின் இரண்டாவது பாதியில், இந்தியாவிலிருந்து டயர் ஏற்றுமதி மீண்டும் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது மதிப்பு அடிப்படையில் 12 சதவிகிதமாகும் என்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளை மேற்கோள் காட்டி வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடினமான சூழல் இருந்தபோதிலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் டயர் ஏற்றுமதி எழுச்சி கண்டது. இது சவாலான காலங்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்ததுள்ளது என்றார் வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அர்னாப் பானர்ஜி.
இந்திய டயர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகிய முன்னேறிய சந்தைகள் உள்பட உலகின் 170 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகளவில் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்திய டயர் உற்பத்தியாளர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை இது வழங்கியுள்ளது.
அதே வேளையில், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்திய டயர் தொழில் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமேஸானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

அமலுக்கு வந்தது ஓமனுடனான வா்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளா்களுக்கு சிறந்த வாய்ப்பு என சைமா தகவல்

மத்திய வா்த்தக வாரிய உறுப்பினராக கே.எம்.சுப்ரமணியன் நியமனம்

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பிஎஸ்என்எல் வருவாய் ரூ.25,000 கோடியாக அதிகரிப்பு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



