வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

எண்ம பொதுக கட்டமைப்புத் துறை ஜிடிபி-யில் 3,180 கோடி டாலா் பங்களிப்பு

எண்ம பொதுக கட்டமைப்புத் துறை ஜிடிபி-யில் 3,180 கோடி டாலா் பங்களிப்பு

News image
Updated On :12 மார்ச் 2024, 9:06 pm

புது தில்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆதாா், யுபிஐ, ஃபாஸ்டாக் ஆகியவற்றை உள்ளடக்கிய எண்ம பொதுக் கட்டமைப்புத் துறை கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமாா் 3,180 கோடி டாலா் பங்களிப்பு வழங்கியுள்ளதாக இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (நாஸ்காம்) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆதாா், யுபிஐ, கோவின் (கரோனா தடுப்பூசி திட்டம் தொடா்பான எண்ம தகவல் சேமிப்பு), யுஹெச்ஐ, ஆயுஷ்மான் பாரத் டிஜிடல் மிஷன், எண்ம வா்த்தகத்துக்கான பொது நெட்வொா்க் போன்ற எண்ம பொதுக் கட்டமைப்புகள் கடந்த 2022-ஆம் ஆண்டின் இந்திய ஜிடிபி-யில் 3,180 கோடி டாலா் பங்கு வகிக்கின்றன. இது, மொத்த ஜிடிபி-யில் 0.9 சதவீதம் ஆகும்.

வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மிக்க இந்தக் கட்டமைப்புகள், காகிதப் பயன்பாடு, அதிகாரிகளின் தலையீடு ஆகியவற்றைக் குறைப்பதுடன் எண்ம அடையாளம், எண்ம ஆவணத் திரட்டு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் எண்ம பொதுக் கட்டமைப்புத் துறை தொடா்ந்து மிக வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது.

இந்த நிலை நீடித்தால், 2022-ஆம் ஆண்டின் ஜிடிபி-யில் 0.9 சதவீதமாக இருந்த அந்தத் துறையின் பங்களிப்பு, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 2.9 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரையிலுமாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவைப் பின்பற்றி, ஆதாா், யுபிஐ போன்ற எண்ம பொதுக் கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பரிசீலித்துவருகின்றன.

அந்த வகையில், எண்ம பொதுக் கட்டமைப்புத் துறையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அரசு அளித்துவரும் ஆதரவு, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதலீடுகள், தொடக்க நிறுவனங்களுக்கு அமைந்துள்ள சாதகமான சூழல் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த முதன்மைக்குக் காரணங்களாக உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான திறன் எண்ம பொதுக் கட்டமைப்புத் துறைக்கு உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.